பிற சமயங்கள்



காணாபத்தியம்

1.   காணாபதியம் என்றால் என்ன?
கணபதியை முழுமுதல் கடவுளாக வணங்கும் சமயம் காணாபதியம்.


2.   கணபதிக்கு வழங்கும் வேறு சில பெயர்கள் யாவை?
பாலகணகதி,தருணகணபதி,வீரகணபதி,சக்திகணபதி,நிருத்தகணபதி,ஏரம்பகணபதி என பல பெயர்கள் உள்ளன.
3.   கணபதியின் தத்துவம் என்ன?
கணபதியை ஒங்காரத்தின் வடிவம் எனக் கருதுவர்.இவர் நாதவிந்து தத்துவத்தின் நிலை கலன்.
4.   கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள் யார்?
ஔவையார்,நம்பியாண்டார்நம்பி முதலியோர் .கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள்.
நம்பியாண்டார்நம்பி
ஔவையார்  


               
5.   கணபதியின் கருணைக்கு உதாரணம் கூறு?
கணபதியின் கருணையால் நம்பியாண்டார் நம்பிதிருமுறைகள் இருக்கும் இடத்தை அறிந்து வெளிக் கொண்டுவர முடிந்தது.
6.   கணபதியை பற்றிய நூல்கள் யாவை ?
விநாயகர் அகவல் , மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை , மூத்தபிள்ளையாரமும்மணிக்கோவை,விநாயகர் கவசம் , விநாயகர்நான்மணிமாலை ,திருநாரையூர் விநாயகர் திருவீரட்ட மணிமாலை போன்ற பல நூல்கள் உள்ளன.
திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தங் கை.

தொகுக்க உதவிய  நூல்கள் : விநாயகர் கலைக்களஞ்சியம் , முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம் 

================================================

கௌமாரம்

1. கௌமாரம் என்றால் என்ன?
முருகனை முதற் தெய்வமாகக் கொண்டு வணங்கும் சமயம் கௌமாரம் என்பதாகும்.’முருகு’என்ற சொல் அழகு, இளமை,மணம், தெய்வம் என்றலாம் பொருள்படும்.



2. முருகனின் வேறு பெயர்கள் யாவை?
தொல்காப்பியத்தில் ‘சேயோன்’ என்றும் கலிதொகையில்’சிவகுமரன்’ என்றும் மற்றும் கடம்பன்,சேந்தன் ,குமரன், வேலன், குகன். என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
3. முருகனின் ஆறுபடை வீடுகள் யாவை?
திருபரங்குன்றம் , திருச்செந்தூர் , திருவாவினங்குடி.,திருவேரகம் , குன்றுதோராடல் , பழமுதிர்ச்சோலை ,முருகனின் ஆறுபடை வீடுகள் ஆகும்.
4. முருகனின் தத்துவ விளக்கம் யாது?
முருகனின் ஆயுதமான வேல் ஞானசக்தியாகவும் ,வள்ளி இச்சாசக்தியாகவும், தெய்வானை கிரியாசக்தியாகவும் விளங்குகிறது.
5. முருக வழிபட்டிற்கு சிறந்த நூல்களாக விளங்குவது எது?
திருமுருகாற்றுபடை, கந்தர்அநுபுதி, திருபுகழ்,கந்தர்களிவெண்பா, சண்முக்கவசம்,குமரவேல்பதிற்றுபத்தந்தாதி, சஷ்டிகவசம் முதலிய நூல்கள்.
6. முருகனின் சிறந்த அடியார்கள் யாவர்?
அகத்தியர் , நக்கீரர் , ஔவையார். , அருணகிரிநாதர் ,குமரகுருபரர், பாம்பன்சுவாமிகள், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் சிறந்ந அடியார்களாக விளங்கினார்கள்.

அகத்தியர்





நக்கீரர்





அருணகிரிநாதர்





குமரகுருபரர்





பாம்பன்சுவாமிகள்





கிருபானந்தவாரியார்



7. முருகனின் வரலாற்றை கூறும் நூல் எது?
கச்சியப்ப சிவாச்சாரியர் எழதிய ‘கந்தபுராணம்’ என்னும் நூலாகும்.
8. முருகனின் அற்புத செயலகளில் ஓன்று கூறு?
குமரகுருபரர் பிறந்த முதற் கொண்டு ஐந்து ஆண்டுகள் வரையில் ஊமையாக இருந்தார். அவரை திருச்சந்தூர் முருகன் சந்நிதியில் இட்டு அவர் பெற்றோர்கள் வழிபாடு செய்தனர். செந்திலாண்டவர் குழந்தையின் கனவிற் தோன்றி ‘குருபரா’ என அழைத்தார். அத்தகைய பெயர் பெற்று அந்நிலையில் ‘கந்தர் கலிவெண்பா’ பாடினார் பின் மதுரை சென்று ‘மினாட்சி அம்மை பிள்ளை தமிழ்‘, வைத்தீசுவரன் கோயிலில்’ முத்துகுமார சவாமி பிள்ளை தமிழ்’ என பாடியுள்ளார். இவை யாவும் மருகன் அருளே.

தொகுக்க உதவிய நூல்கள் : சைவசமயக் கல்வி - தருமபுர ஆதீனம்

======================================================


சாக்தம்

1. சாக்தம் என்றால் எந்த தெய்வத்தை வழிபடும் சமயம் ?
சக்தியினை முழுமுதற் கடவுளாகப் பாவித்து வழிபடும் நெறியினை ’ சாக்தம்’ என அழைத்தனர்.


2. சக்தியை வேறு எவ்விதங்களில் அழைத்தனர்?
போக சக்தி- ‘பராசக்தி’.
வீர சக்தி - ‘துர்கை’.
கோர சக்தி – ‘காளி’.
அதிகார சக்தி – ‘நாராயணி.
அருட் சக்தி – ‘மனோன்மணி’. என்று அழைத்தனர்.
3. சாக்தத் தினைப் பற்றி விளக்கும் நூல் யாது ?
சாக்தத் தினைப் பற்றி விளக்கும் ஆகம நூல்களைத்‘தந்திரம்’ என அழைப்பர் . இந்நூல்களில் சக்தியின் வழிபாட்டின் சிறப்புகள் விளக்கப்ப ட்டுள்ளது.
4. சக்தி பீடங்கள் எத்தனை ?
சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்று.
5. சக்தியை எத்தனை வடிவங்களில் வணங்குகின்றார்கள்?
அருவவடிவம், அருவுருவடிவம், யந்திரவடிவம்,உருவடிவம், தியானவடிவம், என பல வடிவங்களில் வணங்குகின்றார்கள்.
6. சக்தியின் அருவவடிவம் எவை?
திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்)யோகாம்பிகை உருவவடிவில்லாத அருவவடிவம் ,காஞ்சியில் காமாட்சியம்மையின் ஆலயத்திலுள்ள அஞ்சன காமாட்சியும் அருவ வடிவேயாகும்.
7. அருவுருவடிவம், எது?
திருகயிலை மலையின் கண்ணுள்ள மானசரோவர் ஏரி அம்பிகையின் வடிவாக கருதப்படுகிறது, அமர்நாதிலுள்ள பனிவடிவம் , கொல்லூர் கடில்நகரில் (கேரளா)காணப்பெரும் லிங்கவடிவங்கள் ஆகியவை அருவுருவங்களாகும்.
8. யந்திர வடிவங்கள் எவை?
குற்றாலம், அரசூர், திருவானைகா, காஞ்சிபுரம்,மாங்காடு,ஆகிய தலங்களில் ஸ்ரீசக்கரமேரு வடிவில் அம்பிகை வணங்கப்பெறுகிறாள்.
9. சக்தியின் தியான வடிவை கூறு?
சித்த சாபரதந்திரம், மாத்ருகாநிகண்டு முதலான சிற்பாகம நூல்களில் அம்பிகையின் வடிவை தியான சுலோகங்களாக கூறப்பட்டுள்ளன.
10. சக்தியை பற்றி கூறும் நூல்கள் எவை?
அபிராமி அந்தாதி , மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்,காமாட்சியம்மன் அகவல் , காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, அன்னபூரணி திருவருட்பா,ஸ்ரீதுர்கா அஷ்டகம்,என .சக்தியை பற்றி கூறும் நூல்கள் பல உள்ளன.
11. சக்தி வழிபாட்டில் சிறந்து விளங்கிய சிலரை கூறு ?
அபிராமி பட்டர், ஆதிசங்கரர் , குமரகுருபரர் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றோர் சக்தி வழிபாட்டில் சிறந்து விளங்கினர்.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல மனோன்மனி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.


அபிராமி பட்டர்



ஆதிசங்கரர்



மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தொகுக்க உதவிய நூல்கள் : சக்தி கலைக்களஞ்சியம் - முனைவர். சிவ . திருச்சிற்றம்பலம்

======================================================


சௌரம்

1. சௌரம் என்றால் என்ன?
கதிரவனை வழிப்படும் நெறி சௌரம் எனப்படும்.




2. கதிரவனுக்கு கோயில் எங்கெங்குள்ளது?
ஒரிசா மாநிலத்திலுள்ள கோனார்க் கதிரவன் கோயிலும்,தஞ்சை மாவட்டத்திலுள்ள கதிரவனார் (சூரியனார்)கோயிலும் ஆகும்.


கோனார்க் கதிரவன் கோயில்
கோனார்க் கதிரவன் கோயில்



கதிரவனார் கோயில்





3. கதிரவனக்குரிய மந்திரம் என்ன?
ஆதித்ய இருதயம் கதிரவனக்குரிய மந்திரம்.
4. கதிரவனின் உருவத்தை எந்த உலோகத்தில் செய்தல் சிறப்பு?
கதிரவனின் உருவத்தை தாமிரத்தில் செய்து வழிப்படுவதே சிறப்பு .
எங்கும் இருளகற்றி ஏழபரித் தேரேறித்
துங்கமுடன் சுற்றிவரும் சோதிமணிச் சூரியனே
துன்ப இருளகற்றி தூயநலம் திகழ
இன்றே தருவாய் அருள்.


தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...